Saturday, September 17, 2011

இறைவன் எங்கே

அறிவியலும் இறைமையும் ,
அறியாமையால் அறியாத பேதை நான்,
அன்னை மடி பிறந்து
முலையமுது உண்ட  அனைத்து உயிர்க்கும்
முதலில் தோன்றி, இடையில் மறந்து,
முடிவில் மறையும் நிரந்தர கேள்வி,
"இறைவன் யார், எங்கு இருக்கிறான்?"
என் மதியிலும் துளிர்த்ததை
மெதுவாய்க் கேட்டேன், சான்றோர் ஒருவரிடம் !

கதிரவன் அறிவும், மதியின் சாந்தும் கொண்டு,
பசுமை வெற்றிலையாய்ப் பளிச்சித்ட அவர் முகம்,
பாக்கொடு பல்லிடை அரைத்த
வெற்றிலையாய்ச் சிவந்து, பின் சினந்து கூறினார்,
"மூடனே, இறைவன் எங்கும் உள்ளார்"

பாவம் !
அவர்  என்னுள்ளும் உள்ள
இறைவனைக் காண மறந்தார் போலும் !

No comments: