Saturday, September 17, 2011

அன்னை

சிப்பிக்குள் முத்தாகிப்  , புளியிட்ட  செப்பாகி,
மண்ணுக்குள் பொன்னாகி, மண்ணிலே பெண்ணாகிப்  பிறந்து,
எனை வளர்க்க உனை கரைத்து,
தியாகியாகி, எந்தன் ஆசானாகி,
அன்பாகிப்  , பண்பாகிப்  , பிறர் போற்றும் ஒளி விளக்காகி
நல்வழி காட்டும் ஒளியாகி
உடையவனுக் குடனாகி, ஈன்றவன் தாயாகி,
கற்பிர்க்கு அணியாகி, ஒப்பிலா மணியாகிச்  சிறந்த நுன்,
தாளணியாகி, அதிலும் தூளாகி வந்த மண்னும்,
 என்  நெற்றி திலகமாகி திகழாதோ !
என் எல்லாப் பிறப்பிலும்
உன் வயிற்று சுமையாகி
மகனாகிப் பிறக்கும் பேறை
எனக்கு அவ்வொப்பிலா இறைவன் அருள மாட்டானா?

No comments: