Saturday, September 17, 2011

இழப்பு

மாலை முல்லை மலரும் வேளை,
காலை கதிரவன் மறையும் வேளை,
கதிரவன் கண்ட கமலம் போல்
என் உதிரம் கலந்த நாயகி நினைவுகள்,
சோலை மலர் நடுவில் மலர்கையில்,
பாலை பறவை போல் தவிக்கும் என் உள்ளது
நாயகி, என்னை மறந்து,
பள்ளம் மேடு கடந்து கொண்டவனோடு
வீதியில் உலா வருவது கண்டேன்
வெண் துகிலில் இட்ட கரும்புள்ளி போல்
என் வாழ்வில் வந்தவளை மறந்து,
புதிய வாழ்வு தொடர,
மற்றொரு நாயகி, என்னுள்ளம் ஏறினாள்,
அவளும் மண்ணில் சிந்திய நீர் போல்,
என்னை பிரிந்து செல்ல,
இவ்வுலகத்துடன் பிரியா உறவுடை
இயற்கை பெண்ணை காதலித்தேன்,
வாழ்வின் வஞ்சனையோ,
நிலையிலா இன்பம் வேண்டி, மனிதன்
அவளையும் அழிக்க துவங்கி விட்டான்,

இழப்பு என்பது எனக்கு மட்டும்
என் அகராதியின் எல்லா பக்கததையும் அலங்கரிக்கிறதோ?

No comments: